இக்கோயிலிலுள்ள மண்டபங்களில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. இக்கல்வெட்டுக்கள் மூலம் கோயிலுக்கும் சுவாமிக்கும் விடப்பட்ட நிவந்தங்கள் குத்தகைதாரர்களின் பத்திரங்கள், கும்பாபிஷேகம் நடைபெற்ற விபரங்கள், நிர்வாகச் செய்திகள் முதலியவை தெரிய வருகின்றன.