திருவிழாக் காலங்களில் வழக்கமான மேற்படி நிவேதனங்களுடன் தேன்குழல், வடை, புட்டு, சீயம், அதிரசம், தோசை முதலியவை சிறப்பு நிவேதனமாகும். இந்த நிவேதன அமைப்பு ஆனி மகத்திலும் மார்கழித் திருவாதிரையிலும் நடைபெறும் உற்சவகாலங்களில் மாணிக்வாசகருக்கும் உண்டு. ஆத்மநாதசுவாமிக்கு வருடமுழுவதும் உள்ள நைவேத்தியம் மாணிக்கவாசகருக்கும் இந்த இருவிழாக் காலங்களில் (10 + 10 = 20 நாள்களில்) படைக்கப்படுகிறது.